இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே பெங்களுரில் இன்றைய தினம் ஆரம்பமாகிய முதலாவது கிறிக்கெட் ரெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியினரின் பந்துவீச்சுக்களை எதிர்கொள்ளமுடியாத இந்திய அணியினர் 32.2 ஓவர்களில் 46 ஓட்டங்களை மட்டும் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளனர்.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா தமது அணி முதலில் துடுப்பாடுவதற்கு தீர்மானித்தார். அந்த நிலையில் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இந்திய அணியினர் நியூசிலாந்து அணியினரின் பந்துவீச்சில் நிலை குலைந்து போயினர். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி கே எல் ராகுல் ரவீந்திர ஜடேயா ரவிச்சந்திரன் அஸ்வின் உற்பட ஐந்து வீரர்கள் ஓட்டம் எதனையும் பெறாமல் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments